December 7, 2009

பெண்: வளர்ச்சியா? வீழ்ச்சியா?

கள்ளச் சந்தையில்
சாராயம் விற்பவர்கள்
பெரும்பாலும் பெண்கள்

வரதட்சனை வழக்குகளில்
முதன்மை குற்றவாளிகள்
பெரும்பாலும் பெண்கள்

சீர்திருத்தப் பள்ளிகளில்
சிறுவர் சேரக் காரணம்
பெரும்பாலும் பெண்கள்

குழந்தைகளைக் கொன்று
தற்கொலைக்கு முயல்வது
பெரும்பாலும் பெண்கள்

ரங்கநாதன் தெருக்கடையில்
பொருட்களைத் திருடுவது
பெரும்பாலும் பெண்கள்

ஏல சீட்டு நடத்தி
பணத்தோடு மறைவது
பெரும்பாலும் பெண்கள்

வெடிகுண்டாய் ஒரு பெண்;
தொடர் குண்டு வெடிப்பில்
தொடர்புடைய ஒரு பெண்;

சரிநிகர் சமானமாக
ஆணுடன் போட்டி போட்டு,
மெதுவாக பெண்கள்

தங்கள் பெண்தன்மையை
இழந்து கொண்டிருப்பது
வளர்ச்சியா? வீழ்ச்சியா?

இன்று....

உனக்கு நியாபகம் இருக்கிறதா,
சில வருடங்களுக்கு முன்பு,
இதே நாளில்
இரவு வெகு நேரம் ஆகியும்
வீட்டிற்கு போக மனம் இல்லாமல்
கண்களை மூடி
என் தோளிலே சாய்ந்து இருந்தாயே,
எனக்கு கூட கேட்காமல்
உனக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாயே,
நீ வைத்திருந்த குங்கமத்தில்
கொஞ்சம் எடுத்து
எனக்கு ஆசையாய் வைத்து விட்டாயே,
இரவினை கூட திட்டினாயே -ஏன் இப்படி
எங்களை தினமும் பிரிக்கிறாய் என்று,



இன்று....?


தவித்துக்கொண்டிருக்கிறேன் ஒரு முறையாவது
உன் முகத்தை பார்க்க முடியாதா என்று....

புத்தி கெட்டவன் ....

நீ
என் வாழ்வில்
தென்றல்போல் வந்தாய்....

நான்
பூவாக மாறினேன்....

பின்பு நீ
புயலாக வந்து
புரியவைத்து சென்றாய்

நான்
புத்தி இழந்ததை....

தவிப்பை சுமந்து கொண்டு....

திரும்ப ஒரு முறையேனும் பார்க்க மாட்டாயா

என்று தான் திரும்பி திரும்பி பார்க்கிறேன் நான்....

எங்கு திரும்பினால் பார்த்து விடுவானோ....

என்று திரும்பாமலே போகிறாய் நீ

என்னை போலவே தவிப்பை சுமந்து கொண்டு....

November 20, 2009

திரும்பிய கண்ணீர்த்துளிகள்....

என்றைக்கோ
நான்  விட்ட
கண்ணீர்த்
துளிகளுக்குக்   கூட
என்
நினைவு
வந்து
என்னை
தழுவுகிறது  மழை  நீராய் .....
என்றும்
உன்
நினைவில்
வாழும்
என்
நினைவு  மட்டும்
ஏன்
உனக்கு
வருவதில்லை
சொல்லடி
எனதுயிரே????

நம்பிக்கை....

எங்கோ நீயும்....
படித்துக் கொண்டிருப்பாய்....
என்ற நம்பிக்கையிலேயே....
பிறக்கின்றன....
உனக்கான என் கவிதைகள்....

தோல்வி....

என் காதலை பற்றி....
சொல்ல சொன்னாய்....
கவிதைகளை கொட்டினேன்....

உன் காதலை பற்றி....
சொல்ல சொன்னேன்....
வெட்கங்களை கொட்டினாய்....

தோல்வியை
ஒப்பு கொள்கிறது....
என் கவிதைகள்....

பேரழகி....

படபடவென பேசும்
தருணங்களில்....
நீ....
அழகானவள்.
மௌனம் போர்த்தி
அமர்ந்திருக்கும் தருணங்களில்....
நீ....
பேரழகானவள்....

November 18, 2009

காதல்க்காரன்

என் மீது உள்ள
காதலை எல்லாம்
இப்படி கவிதைகளாய்
எழுதி திர்த்துகொண்டிருக்கிராயே,
ஒருவேளை முற்றிலும்
திர்ந்துவிட்டால் என்ன
செய்வாய் என்றாய்??

ஒருவேளை நீ சொல்வது போல்
உன் மீதான என் காதல்
முற்றிலும் திர்ந்துவிட்டால் ,


கண்டிப்பாய்


என் உதிரம் உறைந்து போயிருக்கும்,
என் இமைகள் வேலை நிறுத்தம் செய்திருக்கும்,
என் இருதயம் துடிக்க மறந்திருக்கும் ,
என் மூளை முடங்கி போயிருக்கும் ,
என் விழி நிரந்தரமாய் விழித்தே இருக்கும்,

மொத்தத்தில்,,,,


" சுருக்கமாய் " சொன்னால்
நான் இறந்திருப்பேன்
" விளக்கமாய் " சொன்னால்
என் உடலை விட்டு
என் உயிர் பிரிந்திருக்கும் ,
என் உடலை " மட்டும் "விட்டு விட்டு
என் உயிர் பிரிந்திருக்கும் ....


அப்படியானால் என் பின்னால்
ஆவியாக அலைவாயா ?? என்றாய்....

நீ காதலிப்பதாய் இருந்தால்
இந்த பாவி ,
ஆவியாக அலையவும் தயார்
என்றேன் .....


அதை கேட்டு என் நெஞ்சில்
முகம் சாய்த்து ஆழ ஆரம்பித்தாய்


என் மீது விழுந்த உன் விழி நீர் சூட்டில் உணர்ந்து கொண்டேன் ,,,,

பெருகிகொண்டிருக்கிறது ,,,,
உன் கண்களில் இருந்து
கண்ணீரும் ,,,,
என் மீதான உன் காதலும் ....

November 17, 2009

நகைச்சுவை....

ஆசிரமம் வைத்து ஆயிரக் கணக்கான மக்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்த சாமியார் ஒருவரும், தில்லியில் டாக்சி ஓட்டிக்கொண்டிருந்த டாக்சி டிரைவரும், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இறந்துபோய் மேலுலகம் போய்ச் சேர்ந்தார்கள்.

இருவரின் கணக்குப் புத்தகத்தையும் பார்த்த சித்திரகுப்தன், டாக்சி டிரைவருக்கு சகல வசதிகளையும் உடைய அரண்மனையைக் காட்டித் தங்கும்படி சொல்லிவிட்டு, சாமியாருக்கு ஒரு ஓலைக் குடிலைக் காட்டி தங்கும்படி உத்தரவிட்டான்.

சாமியாருக்கு வருத்தம்

"எத்தனை பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியிருப்பேன். எனக்கு இங்கே ஏன் இந்தக் கதி?"

சித்திர குப்தனிடம் மெல்லக் கேட்டார்.

அவன் அதிரடியாகப் பதில் சொன்னான்.

"உம்முடைய பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்த மக்களெல்லாம் தூங்கினார்கள். அவன் வண்டியோட்டிக் கொண்டு போகையில் அதில் சென்ற மக்களெல்லாம் தூங்காமல் இறைவனைப் பிராத்தனை செய்தார்கள்"

இப்போது தெரிகிறதா?

செய்யும் தொழில் முக்கியமில்லை! மக்களை என்ன செய்ய வைக்கிறோம் என்பதுதான் முக்கியம்!

உயிர் தோழி

ஏதோ ஒரு பயணத்தில்
எதிரெதிர் திசையில்
நானும் என்
உயிர் தோழியும்.

கணவன் அருகே
கையில் ஒன்றும்
கணவனிடம் ஒன்றுமாய்
மழலை பூக்கள்.

கொஞ்ச நேர மென
கணவன் காது
கடித்து கண்முன்
உதிக்கிறாள்
உயிர் தோழி.

”வகுப்பறை வாசல்
மரத்தடி நிழல்
நூலக பாதை
பக்க சுவர்
திரையரங்கு காட்சி
பேருந்து பயணம்
நண்பர் வீடுகள்
கல்லூரி சாலைகள்
தேர்வு கூடம்
பேருந்து நிறுத்தம்”

என பழைய
நினைவுகளில்
பாதி நேரம்
பார்த்து கொண்டே
கழிய,

ஊமையாய் நிற்கிறாள்
உயிரில் வாழும்
உன்னத தோழி.

”எப்படி இருக்கே”
என நான் கேட்டு
முடிப்பதற்குள்

”நேரமாச்சு” என
கணவன் குரல்
வந்த திசை
நோக்கி எதுவும்
சொல்லாமலே
நகர்கிறாள்

என் வினாவின்
விடை அவள்
போகும் பாதையில்
புல படுகிறது.

”நலமாய் இருக்கிறாள்”
அவள் என்று.

கண்கள் நீரை
நிறுத்தி விட்டு
உதடுகள் பூக்க
தொடங்குகின்றன.

ஏதோவொரு பயணத்தில்
எதிரெதிர் திசையில்
மீண்டும் சந்திப்போம்
என்ற நம்பிக்கையோடு.

November 16, 2009

அழகான தொந்தரவு....

நீ ஒரு அழகான தொந்தரவு....
ஆனால் அடிக்கடி தொந்தரவு செய்யாதே-தயவு செய்து
எப்போதும் தொந்தரவு செய்து கொண்டே இரு....

நான்.... நீ....

நான்....
பூக்களின் ரசிகன்.
நீ....
பூக்களின் தேவதை.

வாடிப் போகும்....

கூந்தலில் பூவோடு....
கண்ணாடி பார்த்துவிடாதே....
உன் முகத்தோடு
ஒப்பிட்டு பார்த்தால்....
எந்த பூவும்....
வாடிப் போகும்....

November 15, 2009

அவள்!!!!

விழித்திருக்கும் போது,

அழகிய கனவாய் அவள்!!!!

தூங்கும் போது,

கனவினில் அழகாய் அவள்!!!!

முயற்சி செய் !!!!

முயற்சி செய் !
அல்லது
முயற்சி செய்யவாவது
முயற்சி செய் !!!!

எப்படி எடுத்துக்கொள்ள????

உன்னில்
காதல் சொன்னபோது

நிமிர்ந்து
ஒரு முறைப்பும்
குனிந்து
ஒரு வெட்கமும் தருகிறாயே!

இதை நான்
எப்படி எடுத்துக்கொள்ள?

ஏன்????

உனக்கு
என்ன பிடிக்கும்
என கேட்கிறாய்....

உன்னை தான் பிடிக்கும்
என
சொல்கையில் மட்டும்
ஊமையாகி போகிறேனே....

அது ஏன்?

ஒரு சொல்!!!!

ஒரு சொல்லில் செல்வம் கல்வி
ஒரு சொல்லில் கவனமின்மை விபத்து
ஒரு சொல்லில் சொல்லாண்மை பிரச்சாரம்
ஒரு சொல்லில் மனம் குரங்கு
ஒரு சொல்லில் கொலைகாரன் விலங்கு
ஒரு சொல்லில் மோட்ஷம் மறுமையின்மை
ஒரு சொல்லில் கொடுமை பெண்ணடிமை
ஒரு சொல்லில் பித்று காகம்
ஒரு சொல்லில் இளமை வேகம்
ஒரு சொல்லில் மரணம் சோகம்
ஒரு சொல்லில் முடிவிலி வானம்
ஒரு சொல்லில் கொடை பாரி
ஒரு சொல்லில் மந்திரி விதுரன்
ஒரு சொல்லில் புரட்சி பாரதி
ஒரு சொல்லில் கண்ணன் சாரதி
ஒரு சொல்லில் தமிழ் வள்ளுவன்
ஒரு சொல்லில் சிற்பம் பல்லவன்
ஒரு சொல்லில் நட்பு கர்ணன்
ஒரு சொல்லில் ராமாயணம் வால்மீகி
ஒரு சொல்லில் ராகம் பைரவி
ஒரு சொல்லில் புதிர் பெண்
ஒரு சொல்லில் அகம்பாவம் நான்
ஒரு சொல்லில் உலகம் அம்மா
ஒரு சொல்லில் கவிதை காதல்
ஒரு சொல்லில் காதலில்லையேல் சாதல்....

கவிதை பிறந்தது காதலியிடம்தான்!!!!

கவிதை பிறந்தது காதலியிடம்தான்....!!!!

கவிதையே எழுத தெரியாத
என்னிடம் வந்து நீ
ரத்தின சுருக்கமாய் ஒரு கவிதை
இப்போதே சொல் என்று அடம் பிடித்தாய்....

நான் என்ன செய்வதென்று
தெரியாமல் படபடத்தேன்
நீ கோபமாக முறைத்து....
செல்லமாக கேட்டாய்....
சொல்லுடா என்று....

நான்
உண்மையை ஒப்புக்கொண்டேன்....

எனக்கு தெரிந்த ஒரே கவிதை....
நீதானடி என்று....

அப்போது நீ நாணத்தால் சிவந்து....
நளினத்தை கடந்து....
உன் கைவிரல்கள் மடித்து....
மெல்லமாய் என் மார்பில் குத்திக்கொண்டு....
செல்லமாய் தோள்களில் தலை சாய்ந்தாய்....
வெள்ளமாய் கவிதை ஊற்றெடுத்தது....

அந்த காட்சி நித்தமும் நினைவில்
வந்து போவதால் நிறுத்தாமல்
தொடர்கிறேன் உனக்கான என் கவிதைகளை....!!!!

பிரிவுக்காக ஏங்கும் மனம்!!!!

ஒரு விளையாட்டு சண்டையில்
நாம் மூன்று நாட்கள் பேசிக்கொள்ளவில்லை
ஒரு வழியாக சமாதானம் ஆகி....

பேச ஏங்கி துடித்த நிமிடத்தில்.....

அவசர பயணமாய் மூன்று மாதங்கள்
பிரிய வேண்டிய கட்டாயம்......

இந்த அவசர யுகத்திலும்......

ஆமையாய் நகர்ந்த அந்த
நாட்களின் வேதனையை
என்னவென்று சொல்ல.....

எல்லாம் முடிந்து நம்முடைய
வழக்கமான தனிமையில்...

என் தேவதை உனக்கு தூது விட்டு
கண்ணிரண்டில் மேகம் சுமந்து
காத்திருந்தேன்....!!!!

மூச்சிரைக்க நீ ஓடி வந்து
தென்றலாய் என் மார்பில்
முட்டியதும் இமைகளில்
தேக்கிய மேகங்கள் தானாக
பொழிய துவங்கியது.....

அன்பின் மிகுதியால் கண்ணீர்
மழை நான் பொழிய....

பாசத்தின் மிகுதியால் முத்த
மழை நீ பொழிய....

அந்த நிமிடத்தில்
என் தோள்களை நீ கட்டி கொண்டு
இனி பிரியாதேடா என்னை
என்று உன் இதழும்....
பிரியமாட்டேனடி உன்னை
என்று என் இதழும்....

பொய்யாக பேசிக்கொள்கையில்
மெய்யாக நம் இதயங்கள்
பேசிகொண்டது ....

முத்தம் தரவும், முத்தம் பெறவும்....
மீண்டும் ஒரு பிரிவு வாராதா என்று....!!!!

மருந்து!!!!

காலமெனும் மருந்து போதும்

காயங்கள் ஆற்றிவிட

வடு இருந்தால் இருக்கட்டும்

இனியுமொருமுறை ஏமாறாதிருப்பதற்கு....

காயங்கள்!!!!

உன்னை மறக்க நினைக்கிறன்....

ஆனால்....

மறப்பதற்கு நீ என் வாழ்வில் வந்து போனவள் அல்ல...

என் இதயத்துக்கு காயங்கள் தந்தவள்...

காயங்கள் வலிகளாக மாறி....

வடுக்களாக நின்று கொண்டிருக்கின்றன!!!!

கடவுள் பேசுகிறேன்!!!!

கடவுள் பேசுகிறேன்! - ஆம்
கடவுள் தான் பேசுகிறேன்!
கல் என்று மண் என்று
வெட்டவெளி என்று -இந்த
பிரபஞ்சத்தை படைத்தேன்!
நெருப்பில் குளித்த பூமியை
குளிர வைக்கும் மந்திரம் போட்டேன்!
நுண்ணுயிர் படைத்தேன்!
ஓரறிவு தந்தேன்!
இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து - என்று
அனைத்து அறிவிலும்
உயிரை படைத்தேன்!
மாயக்கட்டங்களில் பருவ மாற்றங்கள்
தவறாது வருமாறு செய்தேன்!
நீண்ட என் சிந்தனைக்கு பின்
ஆறறிவு உள்ள உயிரை படைத்தேன்!
படைக்க மட்டும் தான் செய்தேன்!
அது எனக்கு பெயர் வைத்தது!
உருவம் கொடுத்தது!
சிலை வைத்து உடைத்தது!
என் பெயர் சொல்லி மதங்கள் செய்தது!
மதங்கள் கூறி உயிரை கொன்றது!
மிருக குணத்தின் விளிம்பையும்
தாண்டிய அது - தன்னை
மனிதன் என்று கூறி கொண்டது!
கொல்லுதல் பாவம் தான் - மனம்
இறுக்கி கேட்கிறேன் - மனிதனின்
மனதினை அழிக்கும் ஆயுதம்
செய்து தாருங்கள்!!!!

விஷம்!!!!

காதலெனும்
விஷமருந்திவிட்டேன்!!!!

உடனே கொன்றுவிடுமென
நினைத்திருந்தேன்!!!!

அருந்திய பிறகுதான்
தெரிந்தது!!!!

காதலென்பது
உடனே கொல்லும் விஷமல்ல....

அணுஅணுவாய்க் கொல்லும்
விஷமென்று!!!!

ஏக்கம்!!!!

ஏக்கங்கள் மனதில் மழையாய் பொழிய ,

நினைவுகள் மின்னல்களாய் தோன்றி மறைய ,

எண்ணங்களும் ஆசைகளும் அணைகளை கடக்க ,

வெள்ளம் பெருகியது என் விழிகளில் ,

உன் பிரிவு தாங்காமல்!!!!

POSSESIVENESS

உன்னை மட்டுமே அன்பு செய்யும் என்னை பார்த்தும்

உனக்கு கோபம் வருவதுபோல்....

என்னை தவிர உன்னை யார் அன்பு செய்தாலும் ஏனோ

எனக்கு கோபம் வருகிறது!!!!

நட்புப் பாலில் காதல் துளி

நம் நட்புப் பாலில்
காதல் துளி விழுந்துவிட்டது.

என் காதலை
உன்னிடம் சொல்வதால்
நான் உன்னிடம்
அந்நியப்பட்டுப் போகலாம்,
நீ மறுக்கும் பட்சத்தில்.

இந்த அபாயம் தெரிந்தே
பறித்துச் செல்கிறேன்
இன்றலர்ந்த ரோஜாவொன்றை.

நம் நட்பிற்கு
இன்று மரணம் நிச்சயம்.
என் காதலை
நீ ஏற்றாலும்
ஏற்காவிடினும்!

ஏற்றால் உன் கூந்தலிலும்
இல்லையெனின்
நம் நட்பின் கல்லறையிலும்
இந்த ரோஜா ஏறிக்கொள்ளும்....