கடவுள் பேசுகிறேன்! - ஆம்
கடவுள் தான் பேசுகிறேன்!
கல் என்று மண் என்று
வெட்டவெளி என்று -இந்த
பிரபஞ்சத்தை படைத்தேன்!
நெருப்பில் குளித்த பூமியை
குளிர வைக்கும் மந்திரம் போட்டேன்!
நுண்ணுயிர் படைத்தேன்!
ஓரறிவு தந்தேன்!
இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து - என்று
அனைத்து அறிவிலும்
உயிரை படைத்தேன்!
மாயக்கட்டங்களில் பருவ மாற்றங்கள்
தவறாது வருமாறு செய்தேன்!
நீண்ட என் சிந்தனைக்கு பின்
ஆறறிவு உள்ள உயிரை படைத்தேன்!
படைக்க மட்டும் தான் செய்தேன்!
அது எனக்கு பெயர் வைத்தது!
உருவம் கொடுத்தது!
சிலை வைத்து உடைத்தது!
என் பெயர் சொல்லி மதங்கள் செய்தது!
மதங்கள் கூறி உயிரை கொன்றது!
மிருக குணத்தின் விளிம்பையும்
தாண்டிய அது - தன்னை
மனிதன் என்று கூறி கொண்டது!
கொல்லுதல் பாவம் தான் - மனம்
இறுக்கி கேட்கிறேன் - மனிதனின்
மனதினை அழிக்கும் ஆயுதம்
செய்து தாருங்கள்!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment