உனக்கு நியாபகம் இருக்கிறதா,
சில வருடங்களுக்கு முன்பு,
இதே நாளில்
இரவு வெகு நேரம் ஆகியும்
வீட்டிற்கு போக மனம் இல்லாமல்
கண்களை மூடி
என் தோளிலே சாய்ந்து இருந்தாயே,
எனக்கு கூட கேட்காமல்
உனக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாயே,
நீ வைத்திருந்த குங்கமத்தில்
கொஞ்சம் எடுத்து
எனக்கு ஆசையாய் வைத்து விட்டாயே,
இரவினை கூட திட்டினாயே -ஏன் இப்படி
எங்களை தினமும் பிரிக்கிறாய் என்று,
இன்று....?
தவித்துக்கொண்டிருக்கிறேன் ஒரு முறையாவது
உன் முகத்தை பார்க்க முடியாதா என்று....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment