November 15, 2009

பிரிவுக்காக ஏங்கும் மனம்!!!!

ஒரு விளையாட்டு சண்டையில்
நாம் மூன்று நாட்கள் பேசிக்கொள்ளவில்லை
ஒரு வழியாக சமாதானம் ஆகி....

பேச ஏங்கி துடித்த நிமிடத்தில்.....

அவசர பயணமாய் மூன்று மாதங்கள்
பிரிய வேண்டிய கட்டாயம்......

இந்த அவசர யுகத்திலும்......

ஆமையாய் நகர்ந்த அந்த
நாட்களின் வேதனையை
என்னவென்று சொல்ல.....

எல்லாம் முடிந்து நம்முடைய
வழக்கமான தனிமையில்...

என் தேவதை உனக்கு தூது விட்டு
கண்ணிரண்டில் மேகம் சுமந்து
காத்திருந்தேன்....!!!!

மூச்சிரைக்க நீ ஓடி வந்து
தென்றலாய் என் மார்பில்
முட்டியதும் இமைகளில்
தேக்கிய மேகங்கள் தானாக
பொழிய துவங்கியது.....

அன்பின் மிகுதியால் கண்ணீர்
மழை நான் பொழிய....

பாசத்தின் மிகுதியால் முத்த
மழை நீ பொழிய....

அந்த நிமிடத்தில்
என் தோள்களை நீ கட்டி கொண்டு
இனி பிரியாதேடா என்னை
என்று உன் இதழும்....
பிரியமாட்டேனடி உன்னை
என்று என் இதழும்....

பொய்யாக பேசிக்கொள்கையில்
மெய்யாக நம் இதயங்கள்
பேசிகொண்டது ....

முத்தம் தரவும், முத்தம் பெறவும்....
மீண்டும் ஒரு பிரிவு வாராதா என்று....!!!!

No comments:

Post a Comment