October 13, 2010

Together But So Far !!!!

Why Should I Shed tears,
Why Should I CRY
Even I Know That u Doesn't Care Now even if i Die !!!!

Why does this love decreases with time.... Today this world thinks that we are together but i can feel this distance in between us..!!

i Want that time to come back....
I want you to treat me like a child with your arms around me....
I want you to look in my eyes and make my dreams come true.... but....

I know It will be hard to Bring back that time as our relationship is no longer that strong..!!

We are Together But Still So Far..!!

October 3, 2010

இருதயம்????

இரும்பிலே இருதயம் முளைக்கும் காலம்,
இங்கு இதயமே இரும்பாய் மாறுகிறது!!!!

August 17, 2010

இறந்து போன உயிர் வேண்டும்

இறந்து போன நொடிப்பொழுது வேன்றுமென்றால்
அவளை முதலில் பார்த்த அந்த நொடி தான் வேண்டும்
இறந்து போன மணித்துளிகள் வேன்றுமென்றால்
அவளோடு பேசிய அந்த மணித்துளிகள் தான் வேண்டும்
இறந்து போன நாள் வேன்றுமென்றால்
அவளோடு இருந்த அந்த நாள் தான் வேண்டும்
இறந்து போன உயிர் வேண்டுமென்றால்
அவளுக்காக இறந்துப்போன என் உயிர் தான் வேண்டும்
அவளை மீண்டும் காதலிக்க....

August 8, 2010

மௌனமாய் நினைத்துக் கொண்டேன்....

என்றோ அவன்
என் மீது விளையாட்டாய்
எரிந்த கற்கள்
இன்றும் என் வீட்டுக் கண்ணாடிக் கூண்டில்
அழகிய ஞாபகச் சின்னமாய்....
அவன் கையெப்பமிட்டு கிறுக்கி
தூக்கி எரியப்பட்ட காகிதம்
இன்றும் என் கைப்பையில்
பத்திரமாக குடிகொண்டுள்ளது....
அவன் எனக்காக வாங்கிக்கொடுத்த
மிட்டாயின் காகிதங்கள்
என் அறையில் ஆங்காங்கே அவனை
ஞாபகபடுத்திக் கொண்டிருகின்றது....
இப்படி அவன் கைப்பட்ட ஒவ்வொரு
பொருளையும் பார்த்துவிட்டு
செல்லமாய் என் தலையில் தட்டிவிட்டு
சிரித்துக்கொண்டே கூறினான்
" இவ எப்போதுமே இப்பிடித்தா
கண்டதையும் குப்ப மாதிரி சேர்த்து வைப்பா"
என்று தன் மனைவியிடம்....
நானும் மௌனமாய் சிரித்துவிட்டு
மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்
" நீயும் எப்பொழுதும் போலத்தான் இன்னும் என்னை
புரிந்து கொள்ளவில்லை என்று...."

April 10, 2010

சண்டை

ஒவ்வொரு
சின்ன சண்டையின் முடிவிலும்
செல்ல கோபத்தோடு முத்தமிடுவாய்
கைகளில்....
இப்பொழுதெல்லாம்
நான் ஒரு பெரிய சண்டைக்கு வேண்டி
ஆயுத்தமாகி வருகிறேன்...!!!!

பொய்

பேசி கொண்டிருக்கும் போது ஒருநாள்

நிறைய பொய் சொல்ர
பொய் இல்லாமல் ஒரு கவிதை சொல் என்றாள்
கவிதை என்றாலே பொய் தானே தோழி என்றேன்
இல்லை பொய் இல்லாமல் சொல் என்றாள்
ம்ம்ம்ம்

எதிர்காலத்தை களவாடி நிகழ்காலத்தில் காட்டுபவள்
உன் போன்ற தோழி என்றேன்
ஏய் நிஜம்மா சூப்பர் டா என்றாள்
இல்லை இல்லை இது பொய் என்றேன்
போடா லூஸ் பையா என்றாள்

March 30, 2010

என்ன செய்தாய் என்னை....!!!!

நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி

உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி


சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி

நீ என்னுடன் தான் இருக்கிறாய்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்

உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன

கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!

March 10, 2010

தோழி....

காதலியை பார்க்க போகும் முன்
கைபிடித்து நகம் வெட்டிவிட்டு
புன்முறுவல் செய்வாள்
தோழி....!!!
****************************************
தோழி....
தங்கைக்கும்....
காதலிக்கும்....
இடைப்பட்டவள்....!!!
தோழி....
நெருக்கத்துக்கும்....
தூரத்துக்கும்....
இடைப்பட்டவள்....!!!

****************************************

தோழியை கண்டதும்....
நெருக்கமாய் அமர்வாள் காதலி....!!!
காதலியை கண்டதும்....
புன்னகைத்து விலகி நடப்பாள் தோழி....!!!

****************************************

பிறந்தநாள் வாழ்த்து....
தொலைபேசியில் சொல்வாள் காதலி....!!!
கைபிடித்து குலுக்கி சொல்வாள்
என் அம்மாவோடு சேர்ந்து தோழியும்....!!!

****************************************

வெளியூர் வேலைக்கு செல்லும்போது..
அம்மா....
சோறு கொடுத்து அனுப்புவாள்....
அப்பா....
செலவுக்கு கொடுத்து அனுப்புவார்....
காதலி....
முத்தம் கொடுத்து அனுப்புவாள்....
தோழிதான்....
நம்பிக்கை கொடுத்து அனுப்புவாள்....!!!

****************************************

March 7, 2010

சிரிப்பு????

அழகாய் சிரித்தால்....
அனுபவித்து பார்த்தேன்....
ஆனால் ....
அது அன்பான சிரிப்பா????
இல்லை....
அல்வா கொடுக்கும் சிரிப்பா????

March 4, 2010

இப்படிக்கு காதல்

"
முதன் முதலாய்
என் கவிதைகளை
ஆராய தொடங்கியவள்!
.
எல்லா கவிதையும்
காதலையே சுத்துதே!
.
காதல்னா
உனக்கு ரொம்ப பிடிக்குமா?
யார நினச்சு எழுதின?
.
என் காதலியை தான்!
.
அது தெரியும்..
யார் அவ?
.
என்னவள்!
.
அழகா இருப்பாளோ?
.
ஓரளவு சுமாரா!
.
ஓ.. சரி.. நான் கிளம்பறன்!
.
ஏன்… என்ன அவசரம்?
.
உனக்கு தான் என்ன பிடிக்காதே!
அப்புறம் நான் எதுக்கு இங்க?
.
நான் அப்படி ஏதும் சொல்லலையே!
.
ஓ.. நீ அத வேற சொல்லனுமா?
.
சொன்னா தானே தெரியும்!
.
எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்லுவன்னு!
.
வேறெப்படி சொல்ல?
.
எனக்கு இப்போ உண்மை தெரியனும்!
.
என்ன உண்மை?
.
உனக்கு என்ன பிடிக்குமா பிடிக்காதா?
.
பிடிக்காமலா
உன்னை பற்றி கவிதை எழுதுகிறேன்?
.
வெட்கத்தில்
என் கவிதை தொகுப்புகளாள்
தன் முகம் மறைத்தாள்!
.
சதுரங்கமாடிய காதல்
ராணியை மீட்ட களிப்பில்
நான்!!!
"

அதிர்ஷ்ட கணினி

கணினி சொக்கி போகும்
கன்னி நீ....


கணினி பார்த்து உனக்கு
கண் எரியும்....
 

கணினிக்கு உன்னை பார்த்து
கண் விரியும்....?!
 

கணினிக்கு
எங்கோ அதிர்ஷ்ட மச்சம் இருக்கிறது-தினம்
கண்கொட்டாமல்
பக்கத்தில் வைத்து உன்னை பார்க்கிறதே!!!!

January 27, 2010

இதன் பெயர் தான் காதலோ????

உன்னை மறக்கவும் முடியவில்லை,

மறக்க விருப்பமும் இல்லை,

இதன் பெயர் தான் காதலோ????

மறக்க முடியவில்லை!!!!


மறக்கத்தானடி நினைக்கிறேன்,

நெஞ்சம் மருத்த போதும்,

மறக்க முடியவில்லை அடி உன்னை!!!!

வன்முறை

அன்பை போல் இல்லை,
வேறெந்த வன்முறையும்....