March 30, 2010

என்ன செய்தாய் என்னை....!!!!

நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி

உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி


சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி

நீ என்னுடன் தான் இருக்கிறாய்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்

உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன

கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!

March 22, 2010

LUV METER


March 10, 2010

தோழி....

காதலியை பார்க்க போகும் முன்
கைபிடித்து நகம் வெட்டிவிட்டு
புன்முறுவல் செய்வாள்
தோழி....!!!
****************************************
தோழி....
தங்கைக்கும்....
காதலிக்கும்....
இடைப்பட்டவள்....!!!
தோழி....
நெருக்கத்துக்கும்....
தூரத்துக்கும்....
இடைப்பட்டவள்....!!!

****************************************

தோழியை கண்டதும்....
நெருக்கமாய் அமர்வாள் காதலி....!!!
காதலியை கண்டதும்....
புன்னகைத்து விலகி நடப்பாள் தோழி....!!!

****************************************

பிறந்தநாள் வாழ்த்து....
தொலைபேசியில் சொல்வாள் காதலி....!!!
கைபிடித்து குலுக்கி சொல்வாள்
என் அம்மாவோடு சேர்ந்து தோழியும்....!!!

****************************************

வெளியூர் வேலைக்கு செல்லும்போது..
அம்மா....
சோறு கொடுத்து அனுப்புவாள்....
அப்பா....
செலவுக்கு கொடுத்து அனுப்புவார்....
காதலி....
முத்தம் கொடுத்து அனுப்புவாள்....
தோழிதான்....
நம்பிக்கை கொடுத்து அனுப்புவாள்....!!!

****************************************

March 7, 2010

சிரிப்பு????

அழகாய் சிரித்தால்....
அனுபவித்து பார்த்தேன்....
ஆனால் ....
அது அன்பான சிரிப்பா????
இல்லை....
அல்வா கொடுக்கும் சிரிப்பா????

March 4, 2010

இப்படிக்கு காதல்

"
முதன் முதலாய்
என் கவிதைகளை
ஆராய தொடங்கியவள்!
.
எல்லா கவிதையும்
காதலையே சுத்துதே!
.
காதல்னா
உனக்கு ரொம்ப பிடிக்குமா?
யார நினச்சு எழுதின?
.
என் காதலியை தான்!
.
அது தெரியும்..
யார் அவ?
.
என்னவள்!
.
அழகா இருப்பாளோ?
.
ஓரளவு சுமாரா!
.
ஓ.. சரி.. நான் கிளம்பறன்!
.
ஏன்… என்ன அவசரம்?
.
உனக்கு தான் என்ன பிடிக்காதே!
அப்புறம் நான் எதுக்கு இங்க?
.
நான் அப்படி ஏதும் சொல்லலையே!
.
ஓ.. நீ அத வேற சொல்லனுமா?
.
சொன்னா தானே தெரியும்!
.
எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்லுவன்னு!
.
வேறெப்படி சொல்ல?
.
எனக்கு இப்போ உண்மை தெரியனும்!
.
என்ன உண்மை?
.
உனக்கு என்ன பிடிக்குமா பிடிக்காதா?
.
பிடிக்காமலா
உன்னை பற்றி கவிதை எழுதுகிறேன்?
.
வெட்கத்தில்
என் கவிதை தொகுப்புகளாள்
தன் முகம் மறைத்தாள்!
.
சதுரங்கமாடிய காதல்
ராணியை மீட்ட களிப்பில்
நான்!!!
"

அதிர்ஷ்ட கணினி

கணினி சொக்கி போகும்
கன்னி நீ....


கணினி பார்த்து உனக்கு
கண் எரியும்....
 

கணினிக்கு உன்னை பார்த்து
கண் விரியும்....?!
 

கணினிக்கு
எங்கோ அதிர்ஷ்ட மச்சம் இருக்கிறது-தினம்
கண்கொட்டாமல்
பக்கத்தில் வைத்து உன்னை பார்க்கிறதே!!!!